பி.ஜே.பி.யினர் காரின் முன்பு திமுகவினர் கழக கொடி அசைத்து கலாட்டா!

ஜி.கே.சேகரன்,
சதாப்தி ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் வழியாக நின்று செல்வதன் துவக்க விழாவில் மேடையில் அமர சண்டை போட்ட பாஜக மற்றும் திமுகவினர் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருப்பத்தூர்மாவட்டம் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சதாப்தி ரயிலை ஜோலார்பேட்டையில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திமுக - பாஜகவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் இருந்து பெங்களூர் வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ஜோலார்பேட்டையில் நின்று செல்ல விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கலந்து சதாப்தி ரயிலை கொடியசைத்து அனுப்பி வைக்க இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் அமைச்சர் முருகன் கலந்து கொள்ளாத நிலையில் திமுக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை மற்றும் திருப்பத்தூர் நல்ல தம்பி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் பிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.அப்போது விழா மேடையில் குறைந்த நாற்காலிகளே போடப்பட்டிருந்தது அப்போது முன்னதாக வந்த திமுகவினர் நாற்காலியில் அமர்ந்தனர்.அதனைத் தொடர்ந்து பிஜேபியின் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதன் காரணமாக திமுகவினர் மற்றும் பிஜேபியினர் மேடையிலேயே தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
மேலும் கைகலப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சகாப்தி ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்த பின்னர் பிஜேபியினர் சென்ற காரின் முன்பு திமுகவினர் கழக கொடி அசைத்து ஸ்டாலின் வாழ்க என கோஷங்கள் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.