கணவர் துடிக்க துடிக்க உயிர் இறப்பதை வாட்ஸ் அப்பில் பார்த்தேன்! கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி வாக்குமூலம்!

கணவர் துடிக்க துடிக்க உயிர் இறப்பதை வாட்ஸ் அப்பில் பார்த்தேன்! கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி வாக்குமூலம்!

 ம.பா.கெஜராஜ்,

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 24 வது நபராக ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் வாக்குமூலம் அளித்ததாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  தனது கணவரை துடிக்க துடிக்க கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்தாக, ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

   பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த கொலை சம்பவத்தில் கைதாகி உள்ளனர்.

  அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்  ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டார். அவரை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அப்படியிருக்க,  பொற்கொடியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.

 அதாவது தனது கணவர் ஆற்காடு சுரேஷுக்கு எதிரிகள் அதிகம் என்பதால் அவர் எப்போதும் உஷாராகவே இருப்பார் என்றும் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போது தன்னுடன் தங்கி இருந்தார்

 ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கத்தில் கொல்லப்பட்டதாகவும், இதனால் தான் நிலைகுலைந்து போனதாகவும்,. தனது கணவர் துடிக்க துடிக்க உயிர் இறப்பதை வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ள பொற்கொடி, கொலை நடந்து ஒரு மாதத்திற்கு பின் தனது கணவரின் சகோதரரான பொன்டின பாலு தன்னை சந்தித்தார்.

   அப்போது அண்ணன் மரணத்திற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என்றும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என பொன்னை பாலு கூறியதாகவும் ஆர்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப்போவது குறித்து பொன்னை பாலு மறைமுகமாக தன்னிடம் தெரிவித்ததாகவும் அதனை புரிந்து கொண்டு தனது நகைகளை அடகு வைத்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது.