மதுரை மாநாட்டில் குவியுங்கள்! திமுக மா.செ.அறிவுறுத்தல்!

மதுரை மாநாட்டில் குவியுங்கள்! திமுக மா.செ.அறிவுறுத்தல்!

கு.அசோக்,

 மதுரையில் ஜுன் 1 ஆம் தேதி நடக்கவுள்ள திமுக மாநாட்டில் வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் அதிகப்படியானோர் பங்கேற்பது எனவும் - அமலாக்கத்துறை வருமானவரித்துறையை கைப் பாவையாக வைத்திருக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் - பஹல்காம் தாக்குதல் இறந்தவர்களுக்கும் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும் திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் திமுக செயற்குழு கூட்டமானது நடந்தது.

  இதில் மத்திய மாவட்ட செயலாளரும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகர செயலாளரும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்துகொண்டனர். 

  இந்த செயற்குழு கூட்டத்தில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக, ரோல் மாடலாக விளங்கும் திராவிட மாடல் அரசை பாராட்டியும் தமிழக முதல்வர் துணை முதல்வருக்கும் கழக பொதுசெயலாளர் மற்றும் அமைச்சர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தும் மேலும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுகூட்டங்களை மே 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 மேலும், நகர பேரூர்,ஒன்றிய பகுதிகளில் கூட்டங்களை நடத்துவது எனவும் மேலும் மதுரையில் வரும் ஜுன் 1 ஆம் தேதியன்று நடக்கவுள்ள கழக பொதுகுழுவில் திரளானோர் மத்திய மாவட்டத்தின் சார்பில் கலந்துகொள்வது எனவும் வருமானவரித்துறை அமலாக்கத்துறையை கைபாவையாக வைத்து செயல்படும் பாசிச பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இறந்த போப் பிரான்சிஸ்க்கும் இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.