கொடிநாள் வசூல் பணத்தில் எல்லைப் பாதுகாப்பு வீரர் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும்! தாமதித்தால்?!

ஜி.கே.சேகரன்,
காட்பாடியில் எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர்கள் நலசங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் நிர்வாகிகளுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் முன்னாள் வீரர்கள் நலசங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளில் எல்லைபாதுகாப்பு படைவீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் ஆண்டு தோறும் கொடி நாள் வசூல் செய்து அதனை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி அவர்கள் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதியில் பல நலத்திட்டங்களை வழங்குகிறார்கள்.
ஆனால் எல்லைப் பாதுகாப்பு படையினர் இறந்தால் அவர்களின் மனைவிக்கோ குடும்பத்தினருக்கோ எந்த நலத்திட்ட உதவிகளும் கிடையாது.
எனவே கொடி நாள் வசூல் நிதியில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென 2012 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தோம், மத்திய மாநில அரசுகள் இவர்களுக்கு ராணுவ வீரர்களை போல் உதவிகளை வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் தமிழக அரசு இதுவரையில் அந்த நலத்திட்ட உதவிகளை எல்லைபாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கவில்லை. எனவே தமிழக அரசு கணிவுடன் எல்லை பாதுகாப்பு படைவீரர்களுக்கும் கொடி நாள் வசூலில் வரும் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் மறுக்கபடுமானால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறினார்கள்.