துப்புரவு தொழிலாளர்களின் பணத்தை ஆட்டையை போடும் அதிகாரிகள்:- கண்டித்து 10 நாட்கள் வேலைநிறுத்தம்!
கு.அசோக்,
மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 10 நாட்கள் வேலைநிறுத்தம் இதனால் மாநகராட்சி தூய்மை பணிகள் முழுவதும் பாதிப்பு
வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் 1600-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து இன்று முதல் 10 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா கலையரங்கம் அருகில் அவர்கள் துப்புரவு தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் பெருமாள் தலமையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் மாநில பொறுப்பாளர் ஆனந்தன்,பாரதிதாசன் உள்ளிட்ட 1000 -க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜுன் 1 ஆம் தேதி வரையில் இந்த வேலை நிறுத்தம் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தினசரி இவர்களுக்கு கூலியாக ரூ.426 வழங்க வேண்டும் இதில் ஒரு நபருக்கு ரூ.200 தொழிலாளர்களிடமிருந்து கூலியிலிருந்து அதிகாரிகள் எடுத்துகொள்கின்றனர்.
இவ்வாறு 36 மாதங்களில் ரூ.11.52 கோடி அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
இதே போல் பி.எப் பிடித்தம் 1350 ரூபாய் பிடித்தால் ரூ..700 மட்டும் கட்டிவிட்டு மீதியை எடுத்து கொள்கின்றனர் இவ்வாறு தொழிலாளர்களின் பணம் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பிடுங்கிகொள்கின்றனர்.
ஆனால், தொழிலாளர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் இதே போல் ஈ.எஸ்.ஐ பிடித்தம் செய்தாலும் பணம் கட்டாததால் மருத்துவ வசதிகளை பெற முடியவில்லை மூன்றாண்டுகளாக கூலியும் உயர்த்தவில்லை இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரில் தூய்மை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.