மகனை அடித்து கொலை செய்த தந்தை!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித்திரிந்த மகனை தந்தை அடித்து கொலை கஞ்சா போதையில் இருந்த மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடந்த தகராறில் ஏற்பட்ட விபரீதம்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் வாணியம்பாடி பைபாஸ் பகுதியில் பஞ்சர் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது மகன் ஸ்ரீதர் (27) என்பவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி திரிவதாகவும், மேலும் கஞ்சா அடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. நேற்று கஞ்சா போதையில் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீதரிடம் தந்தை முருகேசன் ஏன் வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் கஞ்சா போதையில் ஊர் சுற்றுகிறாய் என கேட்ட போது தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த அவரது தந்தை முருகேசன் ஸ்ரீதரின் நெஞ்சு பகுதியில் வீட்டிலிருந்த சாம்பார் கரண்டியால் தாக்கியதில் மகன் நிலைகுலைந்தார்.
பின்னர் ஸ்ரீதரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மகனை கொலை செய்த தந்தையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழகத்தில் நாள்தோறும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் வேலைக்கு செல்லாமல் கஞ்சா போதையில் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிந்த மகனை தந்தை தட்டி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது