தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

கு.அசோக்,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 ஐ முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 ஐ முன்னிட்டு இரண்டாம் தளத்தில் ஆட்சித் தலைவர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-க்கான தேர்தல் கால அட்டவணையை இந்திய தேர்தல் இன்று அறிவிக்கவுள்ளது.
எனவே, தேர்தல் தொடர்பான கீழ்க்கண்ட புகார்கள் குறித்து தெரிவிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு (24 x7 ) என செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சுவர் விளம்பரம் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருட்கள், பணம், மதுவகைகள் விநியோகம் செய்தல் மற்றும் ஆயுதம் கொண்டு மிரட்டுதல். வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்வது தொடர்பாக புகார்கள்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவின புகார்கள், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24x 7 கட்டுப்பாட்டு அறைக்கு மேற்சொன்ன புகார்களுக்கு பொதுமக்கள் கீழ்க்காணும் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் இக்கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க Tool Free No. 18004257014, Cell No.7598498541, Whatsapp No. 7598498541. அதில் விதிமுறை மீறுதல் தொடர்பான தகவல்கள், புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் தெரியபடுத்தலாம்.