மசாலா பொருட்களை இலவசமாக கொடுத்த ஏ.சி.சண்முகம்!

ஜி.கே.சேகரன்,
ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு அரிசி இஞ்சி பூண்டு வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்
வேலூர்மாவட்டம், வேலூர், கொணவட்டம் மற்றும் ஆர்.என்.பாளையம் பகுதிகளில் புதிய நீதிக்கட்சி சார்பில் பாஸ்மதி அரிசி 2 கிலோ, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மாசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் இதில் கலந்துகொண்டு ரம்ஜான் தொகுப்பை பெற்று சென்றனர்
இவ்விழாவில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பேசுகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்காக மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளோம். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மேலும் மருத்துவ முகாம்கள் மூலம் மக்களும் பயனடைந்துள்ளனர் தொடர்ந்து மக்களுக்காக பல சேவைகளை செய்யவுள்ளோம் என பேசினார்.