ஆட்சியர் தடாலடி!  சுத்தத்தை நோக்கி வேலூர் கோட்டை!

ஆட்சியர் தடாலடி!  சுத்தத்தை நோக்கி வேலூர் கோட்டை!

ஜி.கே.சேகரன்,

ஆசியாவிலேயே புகழ் பெற்ற வேலூர் தரைக்கோட்டையை காவல்துறை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார்.

 வேலூர்மாவட்டம்,வேலூரில் ஆசிரியாவிலேயே புகழ்பெற்ற அகழியுடன் கூடிய தரைக்கோட்டை இங்குள்ளது சுதந்திரத்திற்குவித்திட்ட சிப்பாய் புரட்சியும் இக்கோட்டையில் தான் துவங்கியது.

  திப்பு சுல்தான் இலங்கையை ஆண்ட கடைசி மன்னர் உள்ளிட்டோரும் முக்கிய தலைவரும் சிறைவைக்கப்பட்டது இந்த கோட்டையில் தான்.

  இது மத்திய அரசின் தொல் பொருள்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. (ஆனால் அவர்கள் ஆணியே பிடுங்குவதில்லை).

  அதன் காரணத்தால் தற்போது இக்கோட்டை தூய்மையில்லாமல் சரியான பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவில் இருந்தது.

 இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, மாநகராட்சி மூன்றும் இணைந்து இந்த கோட்டையை  தூய்மைப்படுத்தும் பணியை துவங்கினர்.

  இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. துவங்கிவைத்தார்.

 இதில் வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் ஜ.ஆனி விஜயா இ.கா.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா இ.கா.ப. மாநகராட்சி மேயர் சுஜாதா,ஆணையர் அசோக்குமார் துணை மேயர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

 இதில் காவல்துறை மாநகராட்சி தூய்மை பணியாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரே நாளில் 750 பேர் கோட்டை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 இதே போல், எதிர்காலத்தில் நகரையும், மாவட்டத்தையும் தூய்மைப்படுத்த வாரத்தில் ஒரு நாள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள், இவர்களுடன் தேசிய மாணவர் படை சாரணர் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும் தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர்.

 வேலூர் கோட்டையையும் பூங்காவையும் பராமரிக்க மாவட்டத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது முழுமையாக ஆய்வு செய்து தேவையான இடங்களில் இப்பணியை தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

 கோட்டை அகழியில் மீண்டும் படகு சவாரி துவக்கவும், இக்கோட்டையை சுற்றுலாதளமாக மாற்றிடவும் மாவட்ட ஆட்சியர் முழு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பு: மத்திய அரசின் தொல் பொருள்துறையின் கீழ் உள்ள பகுதிகளில் சில கட்டுபாடுகள் உள்ளன. அதாவது அதன் எல்லையிலிருந்து 100 மீட்டருக்குள் பொதுமக்கள் எந்த கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்பதுதான் அது.

  ஆனால் மேற்படி விதி வேலூர் கோட்டை அகழியை சுற்றிலும் சூப்பராக மீறப்பட்டிருக்கிறது.  அதற்கு அந்த தொல் பொருள் துறையின் அலுவலர்கள் சிலர் காரணமாக உள்ளனராம்.