நாளை மாலை தேர்தல் நடத்தை விதிமுறை அமல்!

நாளை மாலை தேர்தல் நடத்தை விதிமுறை அமல்!

 நரேஷ்.என்,

 மக்களவை தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆலோசனை நடந்தது.

 சுமார், 45 நிமிடம் நடந்த இந்தக் கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து ஆகியோருடன் இந்த ஆலோசனையை நடத்தினர்.

 அதன் பின்னர் நாளை 16.03.2024 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது. டெல்லியில் உள்ள விக்யான்பவனில் இந்த பிரன்ஸ் கான்ப்ரன்ஸ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  ஆக நாளை மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.