கலெக்டர் ஆபீஸ் லிப்ட்டில் எட்டு பேர் சிக்கினர்! வெப்பத்தால் ஏற்பட்ட மின்விபத்து!

கு,அசோக்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார பாக்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
லிப்ட் நின்று விட்டதால் அதில்சிக்கியவர்களை 45 நிமிடங்களுக்கு மேலாக போராடி அதிகாரிகள் மீட்டனர் . இதனால் அங்கு இருந்த மக்கள் மற்றும் அலுவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் சிலர் சங்க கொடியை ஆட்சியர் வளாகத்தில் ஏற்றிவிட்டு கோஷமிட்டு கொண்டிருந்தனர்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகங்களுக்கு வளாகத்திலேயே தனி மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டுள்ளது. கூடவே ஜெனரேட்டர்களும் வைக்கப்பட்டுள்ளது.இன்று அதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
வேலூரில் ஏற்படும் கடும் வெப்பத்தின் தாக்கத்தினால் டிரான்ஸ்பார்மர் அருகில் மின் பெட்டியில் ஒயர்கள் தீபிடித்து எரிய துவங்கியது.
இதனை சரி செய்ய சென்ற பொது பணித்துறையின் எலெக்ட்ரி ஷியன் சந்தோஷ் என்பவர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்சியர் அலுவலக லிப்டில் அதிகாரிகள் பெண்கள் என 8 பேர் சிக்கி கொண்டனர். 45 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்னர் ஊழியர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர் .
இந்த அதிக வெப்பத்தின் தாக்கத்தினால் ஒயர்கள் தீபற்றியதாலும் இந்த விபத்து ஏற்பட்டது இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பதட்ட நிலை காணப்பட்டது .
இப்போது மின்சார பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் சிலர் ஒன்று கூடி ஆட்சியர் அலுவலகத்தில் சங்க கொடியை நட்டு கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.
இதனால் அங்கு வந்து சென்ற பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.