25 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணை! வேலூர் கலெக்டர் வழங்கி வாழ்த்து!

25 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணை! வேலூர் கலெக்டர் வழங்கி வாழ்த்து!

  ம.பா.கெஜராஜ்,              

 25 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணைகளை வழங்கிய வேலூர் கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., பயணாளிகளுக்கு வாழ்த்துகளும் அறிவுரைகளும் சொன்னார்.

   கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லத்தேரி ஊராட்சியில் தொண்டாண்துளசி கூட்ரோடு அருகே வேலூர் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தையும்,  லத்தேரி ஊராட்சி கனகசமுத்திரம் ஏரி கால்வாயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 9.98 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளையும், சின்ன லத்தேரி குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மிமி ன் கீழ் ரூ. 9.53 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 மேலும் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சி வெங்கடாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் குழந்தைகள் மையத்தை பார்வையிட்ட ஆட்சித்தலைவர், செஞ்சி வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த முதியவர் திரு. செங்காரெட்டி அவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை அறிந்து அவருக்கு உடனடியாக காதொலி கருவி வழங்க ஏதுவாக அவரின் ஆதார் அட்டை மற்றும் இதர விவரங்களை பெற்று  நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

  மேலும் அதே கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 ன் கீழ் ரூபாய் 8.67 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கட்டிட கட்டுமான பணிகளையும், காலாம்பட்டு பிள்ளையார் கோயில் தெருவில் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளிடம் அவர்களின் விவரங்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் பரப்பளவில் மா செடிகளை பயிரிட்டுள்ள பயனாளியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் இன்று (01.09.2023)  மா செடிகளின் வளர்ச்சி பற்றி கேட்டறிந்தார்.     

   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 நபர்களுக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலகில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி ஆலோசனை வழங்கினார்.  இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த.மாலதிமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு பி.விஜயராகவன்ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு. பாலாஜி ஆகியோர் உடன் உள்ளனர்.

 தேசிய தர உறுதி தரநிலைகள் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 ஆரம்ப சுகாதார நிலையங்களின்  மருத்துவ அலுவலர்கள் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சி தலைவர்  காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு. பானுமதி உடன் உள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம்.