மாணவர்கள் மத்தியில் உண்மை சம்பவங்களை விளக்கிய டிஎஸ்பி!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு "மக்களின் காவலன்" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  1.சட்ட மற்றும் ஒழுங்கு 2. போதை ஒழிப்பு 3.குழந்தைகள் மற்றும் பெண்கள் 4. சைபர் குற்றங்கள் மற்றும் 5.சாலை விதிகள் ஆகிய ஐந்து முக்கிய கருத்துகள் மாணவர்கள் பயன்படும்படி புதிய திட்டம் மக்களின் காவலன் என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் நேற்று துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் புளியங்குடி அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மக்களின் காவலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 அப்போது டிஎஸ்பி அவர்கள் பல்வேறு உண்மை சம்பவங்களை மாணவர்களுக்கு சொல்லி விழிபுணர்வு ஏற்படுத்தினார்.

  நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி  எடுத்துக்  கொண்டனர்.