வெடி குண்டு வெடித்து பசுமாட்டின் வாய் சேதம்!

கு.அசோக்,
வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் கிழிந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புது மாங்காடு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் என்பவருக்கு சொந்தமாக மூன்று மாடுகள் உள்ளது. அவர் மூன்று மாடுகளையும் அருகே உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வயல்வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த போது திடீரென்று வெடிகுண்டு வெடித்து மாட்டின் வாய் கிழிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து ஆற்காடு கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் வயல்வெளிகளில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடப்படும் செயலானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளதுஸ்.
இதுபோன்ற நாட்டு வெடி விபத்து பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் மேலும் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.