தலைமை இல்லாத கூட்டணிக்கு வாக்களித்தால்  நாடு பாதுகாப்பாக இருக்காது ஜி.கே.வாசன் பிரச்சாரம்!

தலைமை இல்லாத கூட்டணிக்கு வாக்களித்தால்  நாடு பாதுகாப்பாக இருக்காது ஜி.கே.வாசன் பிரச்சாரம்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஆம்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ஜி.கே வாசன் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மத்திய அரசுக்கு யார் தலைமை தாங்கி நாட்டை வழிநடத்துவது என்பதற்கான தேர்தல்,

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை மோடி தலைமை வகிக்கிறார்., எங்கள் கூட்டணியின் தலைவர் மோடி என மார்தட்டி சொல்ல முடியும்.

எதிர் கட்சிகள் குறிப்பாக தமிழகத்திலே திமுக காங்கிரஸ் கூட்டணி அகில இந்திய அளவில் இண்டி கூட்டணி என்பது தங்களுடைய தலைவர் யார் என்பதை சொல்ல முடியுமா?

இதை மக்கள் அவர்களிடம்  கேட்டால் வெட்கி தலை குனியும் சூழ்நிலை இருக்கிறது.காரணம் அந்த கூட்டணிக்கு தலைமை கிடையாது., நாற்காலி சண்டை ஏற்படும்.,

அந்த கூட்டணி ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை தலைமை இல்லாத கூட்டணியை நீங்கள் ஆதரித்தால் இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்காது.

பொருளாதார ரீதியாக வளராது எனவே நம்பிக்கை கொடுப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு பேசிய ஜிகே வாசன் உங்களுடைய தேவைகள் நிறைவேற வேண்டுமானால் மத்தியில் ஆட்சியை அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஏ. சி சண்முகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என  பிரச்சாரம் மேற்கொண்டார் ஈடுபட்டார்.