கலெக்டர் வரும் போது விவசாய கூட்டத்தை நடத்துங்கள்!

கு.அசோக்,
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவையை துவக்கவும் - காட்டுபன்றி யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து வேளாண் விளைபயிர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் உரத்தட்டுபாட்டை போக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் குடியாத்தம்,காட்பாடி கேவிகுப்பம் அனைக்கட்டு ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் பேசுகையில் ஆட்சியர் கடந்த முறையும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை இந்த முறையும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ஆகவே ஆட்சியர் சரியாக நாளை ஒதுக்கி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
மேலும் காட்டுபன்றிகளை சுட மற்ற மாநிலங்களில் அனுமதியுள்ளதை போல் காட்டுபன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க காட்டுபன்றிகளை கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் யானையை தடுக்க விவசாயிகள் சைரன் கருவியை பயன்படுத்த கூடாது என தடைவிதித்துள்ளீர்கள் இதனால் மலை கிராமங்களில் மீண்டும் யானைகள் பயிர்களை நாசம் செய்கிறது.
இதனை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் யூரியா போன்ற உரங்கள் சரியாக கிடைக்காமல் உரத்தட்டுபாடு உள்ளது அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.