திருமாவளவனை ஒருமையில் பேசியதாக யூடியூபர் மீது புகார்!

திருமாவளவனை ஒருமையில் பேசியதாக யூடியூபர் மீது புகார்!

 கு.அசோக்,

 வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மை இந்தியா யூடியூப் சேனலில் விடுதலை சிறுத்தைகள் முன்னாள் மாவட்ட செயலாளர் கோபி நயினாரை தரக்குறைவாக நடத்தியதை கண்டித்தும்  திருமாவளவனை ஒருமையில் பேசியது குறித்தும் யூடியூப் சேனல் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர். 

 வேலூ£,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் தலைமையில் மை இந்தியா யூடியூப் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி  காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை சந்தித்து மனு அளித்தனர்.

  அதில் மை இந்தியா யூடியூப்பில் அதன் உரிமையாளர் முக்தார் விடுதலை சிறுத்தைகள் முன்னாள் மாவட்ட செயலாளர் கோபில் நயினாரை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும் மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஒருமையில் பேசியது குறித்தும் வன் கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.