பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது! 14 பேர் உறுப்பினர்! ஆளுநர் ஆணைப்படி அரசாணை வெளியீடு!

ம.பா.கெஜராஜ்,
பத்திரிகையாளர் நல வாரியம்" அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது, அமைச்சரை தலைவராகக் கொண்டு மொத்தம் 14 பேர் இதில் இடம் பெறுகிறார்கள்.
இதற்கான அறிவிப்பை ஆளுநரின் ஆணைப்படி அரசுச் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.அவர்கள் வெளியிட்டுள்ளார். ஆளுநர்க அது பற்றீன விவரம் வருமாறு,
நிர்வாகம் - செய்தி மக்கள் தொடர்புத் துறை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் " பத்திரிகையாளர் நல வாரியம் " அமைத்து இரண்டு பணியிடங்கள் உருவாக்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது .
செய்தித்துறை அமைச்சர் அவர்கள் , 2021-2022 - ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் , 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் " தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் " பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் " என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள்.
அதனை செயல்படுத்தும் விதமாக , கீழ்க்கண்ட ஆணைகளை அரசு வெளியிடுகிறது.
- உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு . நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் " பத்திரிகையாளர் நல வாரியம் " ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்படு கிறது. 3. நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத் திட்ட உதவிகளுடன், பின்வரும் திட்ட உதவிகளும் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் . பத்திரிகையாளர்களின் புதிய நல உதவித் திட்டங்களுக்கான தகுதிகள் மற்றும் வரையைறைகள் குறித்து தனியே ஆணைகள் வெளியிடப்படும்.
- மேற்காணும் பத்திரிகையாளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும் , அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 7 நபர்களையும் , அலுவல் சாரா உறுப்பினர்களாக 6 நபர்களையும் கொண்ட குழு அமைக்கப்படும்.
- பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையாக , பத்திரிகைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணத்தில் 1 சதவீதம் தொகையை நல் வாரியத்திற்கென வழங்கிட ஆணை வெளியிடப்படுகிறது.
- பத்திரிகையாளர் நல வாரியத்திற்கென புதிதாக ஒரு நிர்வாக அலுவலர் பணியிடமும் , ( லெவல் 22 -ரூ 56,100 - 1.77,500 ) ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் ( லெவல் 8 - ரூ.19,500-62,000 ) ஆகிய பணியிடங்களை தோற்றுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
மேலும் , திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் பணிபுரியும் அலுவலர்களே , பத்திரிகையாளர் நலவாரிய பணிகளையும் மேற்கொள்ள ஆணை வெளியிடப்படுகிறது. 7.நடைமுறையில் உள்ள பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நல வாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீலனைக் குழு அமைக்கப்படும்
- மேலே பத்தி 6 - இல் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான செலவினம் கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும் : 2220 செய்தி மற்றும் விளம்பரம் - 60 ஏனையவை - 001 நெறிப்படுத்தலும் நிருவாகமும் மாநிலச் செலவினங்கள் – A.A தலைமையிடப் பணியாளர்கள் - 301 சம்பளங்கள் . IFHRMS ( த.தொ.கு.எண் .2220 60 001 AA 30100 )
- மேற்படி தோற்றுவிக்கப்படும் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் நடைமுறையில் உள்ள ஆணைப்படி ஊதியம் , அகவிலைப்படி . மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள பிற படிகளைப் பெற தகுதியுடையவர் ஆகிறார்கள் .
10.மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்தும் ,WP.32091 / 2019- இன் மீதான மாண்பமை நீதிமன்ற ஆணையின்படி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன்றத்தின் ( Press Council of Tamil nadu ) கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகும்
- இவ்வாணை பணியாளர் குழுவின் ஒப்புதலுடனும் , நிதித்துறையின் அலுவல் சார்பற்ற எண் 2021 II PSL 0048 / மைமஆபி / நாள் . 29.11.2021 - இன் இசைவின்படியும் வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.