மாணவர்களுடன் உணவருந்தி தட்டை கழுவிய கலெக்டர்!

கு.அசோக்
ஆற்காடு நகராட்சி தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 661 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டிகளை தயார் செய்யும் உணவு கூடத்திணை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி இ.ஆ.ப. அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு உணவு தயாரிக்கும் முறை கேட்டறிந்தார்.
அதுமட்டுமில்லாமல், உணவின் தரத்தினை சாப்பிட்டு பரிசோதித்தார்கள்.
பின்னர் நாள்தோறும் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கும் உணவின் வகைகளை கேட்டறிந்தார்கள்.
காலை 4:30 மணிக்கு சமையல் தொடங்கி 7 மணிக்கு சமையல் செய்து முடிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் 7 மணிக்கு பள்ளிகளுக்கும் உணவு அனுப்பப்பட்டு பள்ளிகளில் உணவு குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது என ஊழியர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆற்காடு நகராட்சி தெற்கு தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட த்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி குழந்தைகளுடன் தரையில அமர்ந்து சாப்பிட்ட பின் தான் சாப்பிட்ட சாப்பாட்டு தட்டினை தானே எடுத்துச் சென்று கழுவி சுத்தம் செய்தார்கள்.