வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்! வாலிபால் விளையாடி உற்சாகம்!

க.பாலகுரு,
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமது தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைமை நேற்று தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
அந்த பொதுக் கூட்டத்தில் வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அதன் பின்னர் தஞ்சை சென்று தங்கிய முதல்வர், அங்கு போட்டியிடும் வேட்பாளர் முரசொலியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
காலை தஞ்சையில் வாக்கிங் சென்றவாறு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த போது, ஒரு மைதானத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைக் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார்.
பின்னர் முதலமைச்சர் இளைஞர்களுடன் சேர்ந்து தானும் வாலிபால் விளையாடினார்.
பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து டக்கென ஒரு டீக்கடைக்கு சென்று அங்கு டீ வாங்கி பருகி விட்டு பிரச்சாரத்தை தொடர்ந்தார்.