திமுக கூட்டத்தில் கொடுத்த கெட்டு போன பிரியாணி! 65 பேருக்கு பாதிப்பு!

திமுக கூட்டத்தில் கொடுத்த கெட்டு போன பிரியாணி! 65 பேருக்கு பாதிப்பு!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

   திமுக கூட்டத்தில் கொடுக்கப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று  நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 அதனுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

 அந்த பிரியாணியை வாங்க தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அதை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்  விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

   விருதுநகர் அரசு மருத்துவமனையில் 6 சிறுவர்கள் உட்பட 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

  ஏன் இந்த பாதிப்பு என்று விசாரித்த போது,  நேற்று வழங்கிய பிரியாணி அதற்கு முன் தினமே  தயாரித்து கன்டெய்னரில் அடைத்து வைத்துவிட்டதால் அது கெட்டுவிட்டதாம்.