ஓடவிட்டு மாணவனை கொன்ற தலைமையாசிரியர்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், மாணவர்களை கண்டித்ததுடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த 40 மாணவர்களை, பள்ளி மைதானத்தை சுற்றி 4 முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாணவர்கள் மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர். ஓடி முடிந்ததும் அப்போது மோகன்ராஜ் என்ற மாணவன் திடீரென சுருண்டு விழுந்தான்.
அவனுக்கு சக மாணவர்கள் முகத்தில் தண்ணிர் தெளித்து எழுப்பினர். அப்போது எழுந்து அமர்ந்த மோகன்ராஜ் மார்பு பகுதில் வலி இருப்பதாக சொல்லியிருக்கிறான்.
பின்னர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவனுக்கு அங்கிருந்த மருத்துவர் ஷாலினி ரூபா இ.சி.ஜி எடுக்க வேண்டும் என்று அழைத்துச்சென்றார்.
பின்னர் அவனுக்கு பிட்ஸ் வந்துள்ளது, இந்நிலையில் மாணவன் மோகன் ராஜ் இறந்துபோனான். இதுதொடர்பாக அணைக்கட்டு போலீசார் பார்வைக்கு சென்றதும் போலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் ஆர்,டி,ஓ.பூங்கொடி ஆகியோர் அங்கு வந்து பதற்றத்தை தடுத்தனர்.
மாணவன் இறப்புக்கு காரணமான தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் இந்த பிரச்சனையிலிருந்து தப்ப முயல்கிறார். அதற்காக பேச்சுவார்த்தை செய்ய புரோக்கர்களை நியமித்தாராம்
அடப்பாவிகளா?