பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி கொலையாளிகள் ஆஜர்!

பலத்த போலிஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி கொலையாளிகள் ஆஜர்!

இம்மி,

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்து கும்பகோணம் சிறையிலிருந்த 6 குற்றவாளிகளை வாணியம்பாடி காவல்துறையினர் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவு,

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில்  மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கடந்த 10ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

 இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குமார், செல்வகுமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், அஜய் ஆகிய 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில்  நீதிமன்ற நடுவர் பாரதி முன்பு சரணடைந்தனர்.

 அதைதொடர்ந்து அவர்களை 7 நாள் காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

 அதைத் தொடர்ந்து கும்பகோணம் சிறையில் 6 பேர் அழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இன்று வாணியம்பாடி காவல்துறையினர் கும்பகோணம் சிறையில் இருந்த குற்றவாளிகள் 6 பேரை அழைத்து வந்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் காளிமுத்து வேல் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தினர்.

  அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.   அதைதொடர்ந்து அவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் வாணியம்பாடி காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது அதில் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு:- வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது. அவர் செங்கல்பட்டு  மாவட்டம் படப்பை சேர்ந்த கணேஷ் என்பவர் ஆவார். ஆயுதங்கள் வாங்கி கொடுத்து கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.