மாநிலங்களவையிலும் பலத்தை இழந்திருக்கிறது பாஜக!

நரேஷ்.என்.
மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு மாநிலங்கள் அவையிலும் பலம் குறைந்திருக்கிறது.
மக்களவையில் 543 உறுப்பினர்கள் இருப்பதைப்போலவே, மாநிலங்கள் அவைக்கு மொத்த உறுப்பினர்களின் எண்னிக்கை 245. ஆனால் தற்போது 225 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். 20 இடங்கள் காலியாக உள்ளன.
ஆகவே எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற 113 பேரின் ஆதரவு தேவை. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 101 பேர் மட்டுமே இருப்பதால் கூட்டணியில் இல்லாத பிற கட்சிகளின் ஆதரவையும் நாட வேண்டியுள்ளது.
இந்நிலையில் நியமன எம்.பிக்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷாகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசின் பரிந்துரையின் பேர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவால் நியமிக்கப்பட்டவர்கள். இந்த 4 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86ஆக குறைந்துள்ளது.
இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கணக்கில் பார்த்தால் 101ஆக மாறியுள்ளது. ஆனால் இது பெரும்பான்மையை விட குறைவாகும்.
ஆகவே அதிமுக (4), ஜெகன் மோகன் ரெட்டி (11) இதுதவிர ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளக் கட்சிக்கு 9 எம்.பிக்கள் இருக்கின்றனர்.
இந்த கட்சி எம்.பிக்களின் ஆதரவை பாஜக கோர வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அதிமுக முறுக்கிக் கொண்டிருப்பதால் வாய்ப்பு குறைவுதான். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த தெலுங்கு தேசம் உடன் தான் பாஜக கூட்டணி வைத்திருப்பதை ஜெகன் மோகன் ரெட்டி எப்படிப் பார்ப்பார் என்பது நமேக்கே புரிகிறது தானே.
அதே போல் நிலைபாடை தான் ஒடிசா பிஜு ஜனதா தளம் எடுக்கும்.
மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி வசம் காங்கிரஸ் 26, திரிணாமூல் 13, ஆம் ஆத்மி, திமுக ஆகியவை தலா 10 எம்.பிக்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படியிருக்க, காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க.வுக்கு கூடுதலாக 9 உறுப்பினர்கள் கிடைக்கலாம். ஜம்மு காஷ்மீர், தெலுங்கானாவில் தேர்தல் நடத்தும்போது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும். இதன்மூலம், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க இது உதவும்.