நறுவீ மருத்துவமனைக்கு வரும் அசாம் ஆளுநர்! நிறுவனத் தலைவர் ஜி.வி.சம்பத் தகவல்!

நறுவீ மருத்துவமனைக்கு வரும் அசாம் ஆளுநர்! நிறுவனத் தலைவர் ஜி.வி.சம்பத் தகவல்!

 ம.பா.கெஜராஜ்

 மே 8-ல், வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிறப்பு பக்கவாத நோய் சிகிச்சை பிரிவு தொடக்கம் - அசாம் மாநில ஆளுநர் மாண்புமிகு குலாப் சந்த் கட்டாரியா திறந்து வைக்கிறார்.

வேலூர் நறுவீ மருத்துவமனையில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பக்கவாத நோய் சிகிச்சை பிரிவை வருகிற 8-ம் தேதி அசாம் மாநில ஆளுநர் மாண்புமிகு குலாப் சந்த் கட்டாரியா பங்கேற்று திறந்து வைக்க உள்ளதாக மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.

 இது சம்மந்தமாக நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

 பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலக தரத்தில் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் வேலூரில் தொடங்கப்பட்ட நறுவீ மருத்துவமனை கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் பெரும் ஆதரவுடன் சிறப்பாக செயலாற்றி வருகின்றது.

 இம்மருத்துவமனையில் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், புற்று நோய், முடக்கு வாதம், அவசர சிகிச்சை, எலும்பு முறிவு, நரம்பியல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிறப்பு நோய் சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகின்றது.  

 மேலும், ரோபோ கொண்டு மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை வசதிகள் நாட்டில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் நறுவீ மருத்துவமனையும் ஒன்றாகும். இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் அரசின் அனுமதியுடன் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

 இம்மருத்துவமனையில் சிறப்பு பக்கவாத நோய் சிகிச்சை பிரிவு புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 8-ம் தேதி மாலை 6.00 மணி அளவில் நடைபெறுகிறது. மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். இவ்விழாவில் அசாம் மாநில ஆளுநர் மாண்புமிகு குலாப் சந்த் கட்டாரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு பக்கவாத நோய் சிகிச்சை பிரிவை தொடங்கி வைக்கிறார்.

  இந்நிகழ்ச்சியில் அசாம் மாநில ஆளுநரின் துணைவியார் அனிதா கட்டாரியா, அகில இந்திய ராஜஸ்தானி பிரவாசி சங்க பொது செயலாளர் பராஸ் ஜெயின், வேலூர் எஸ்.எஸ். ஜெயின் சங்க செயலாளர் ராஜே'; குமார், மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.