அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000! முதலமைச்சர் அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000! முதலமைச்சர் அறிவிப்பு!

 ம.பா.கெஜராஜ்,   

  தமிழக அரசு பொங்கலுக்காக அரிசி  அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இதனை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேட்டுக்கொண்டன. இந்நிலையில் கோரிக்கையை ஏற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.    

  கடும் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவித்த அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. 

  ஆனால் தற்போது எதிர்கட்சிகளின் கோரிக்கை முன்னிட்டு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆக, நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.