கான்ட்ராக்டரிடம் கட்டிங் கேட்ட வார்டு உறுப்பினர் கைது!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே தார்சாலை அமைத்த காண்ட்ராக்டர் ஒருவர் வார்டு உறுப்பினருக்கு உரிய கமிஷன் தராததால் பிரச்சனை செய்து சிறையில் சிக்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி மற்றும் மிட்டாளம் ஊராட்சிக்களுக்கிடையே முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது.
(2.05.2024) அன்று (ஸ்ரீ நிதி கன்ஸ்டரக்ஷன்) என்ற நிறுவனம் மூலம், ரங்காபுரம் முதல் கொத்தூர் கிராமம் வரைபணிகள் நடந்தன.
சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 89 லட்சம் மதிப்பில், தார் சாலை அமைக்கப்பட்ட நிலையில், அதில் உள்நோக்கத்தோடு ஒரு வார்டு உறுப்பினர் பிரச்சனை செய்தார்.
புதியதாக போடப்பட்ட தார் சாலையிற்கு உரிய கமிஷன் தரவில்லையெனக்கூறி மிட்டாளம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் பிரகாஷ், என்பவர் கடந்த 3 ஆம் தேதி இரவு தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி புதியதாக போடப்பட்ட தார் சாலையில் 20 மீட்டர் தொலைவிற்கு பெயர்த்தெடுத்துள்ளார்.
இதனால் 2 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்ததாரர் சக்தி கணேஷ் என்பவர் உமராபாத் காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.
அதே போல்ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பிரகாஷ் மீது மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனும் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், பிரகாஷை உமராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.
தார் சாலை அமைக்க உரிய கமிஷன் தராததால் வார்டு உறுப்பினர் தார் சாலையை பெயர்த்தெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது