அருணை மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு விழா!

அருணை மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு விழா!

 pandi

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்

எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்ற

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலாம் ஆண்டு புதிய மாணவர்கள் துவக்க விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 53 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், சாலை விபத்தில் 30934 பேர் சிகிச்சை பெற்று நிலையில் 27.71 கோடி அரசு செலவு செய்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்…
கொரோனா தொற்றால் தமிழகத்தில் சகஜ நிலை இருப்பதற்கு தமிழக முதல்வரின் கடுமையான உழைப்பு மற்றும் நிர்வாகத்திறன் தான் காரணம்…மா.சுப்;ரமணியன் பெருமிதம்…
திருவண்ணாமலை-14.03.2022
திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று புதியதாக முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைத் துறை அமைச்சர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக மாணவ மாணவிகள் மருத்துவ உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
அப்போது புதியதாக சேர்ந்த மாணவ மாணவிகளிடம் உரையாற்றிய அமைச்சர், தமிழக முதல்வராக முதல்வர் ஸ்டாலின் 6 லட்சம் கோடி கடனோடு மட்டுமின்றி 25436 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் ஒரே மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை 36186 ஆக உயர்ந்தது. அதே வேளையில் அந்த மாதத்தில் மட்டும் தொற்றால் 10184 பேர் இறந்ததாகவும் கூறிய அவர், இந்த நிலை தற்போது முற்றிலுமாக மாறி வருவதுடன் தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக இறப்பே இல்லை என்றும், கடந்த 24 மணிநேரத்தில் சிங்கப்பூரில் 12632 பேரும், மலேசியாவில் 26250 பேரும், கேரளாவில் 1088 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில தமிழகத்தில் 95 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இருந்த போதிலும் அனைவரும் பாதுகாப்புடனும், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்ட அவர் உலகில் சகஜ நிலை இல்லையென்றாலும் கூட தமிழகத்தில் சகஜ நிலை இருப்பதற்கு தமிழக முதல்வரின் கடுமையான உழைப்பு மற்றும் நிர்வாகத்திறன் தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்திய அளவில் பசுமைப் பரப்பு 24.6 சதவீதமாக இருப்பதாகவும், தமிழகத்தில் 23.9 சதவீதம் உள்ளதாகவும் கூறிய அவர் விரைவில் அவை சரிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.. 
எந்த நாட்டிலும் செய்யாத மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் இதுவரை 20 முதல் 25 லட்சம் மக்கள் பயன் பெற்ற நிலையில் தற்போது 53 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றிருப்பது உலக சாதனைக்கு சான்று என்றும் பெருமிதமாக பேசிய அவர், தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் நேர்ந்தால் அவர்களுக்கு மருத்துவம் செய்யும் வகையில் 640 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வகையில் இதுவரை 30934 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் 27 கோடியே 71 லட்சத்து 51 ஆயிரத்து 072 ரூபாய் அரசு செலவு செய்துள்ளதாகவும் பேசிய அவர், இதனால் கடந்த ஆண்டு 1700 பேர் விபத்தில் இறந்ததாகவும், இந்த ஆண்டு 700 பேர் விபத்து மரணம் என்றும் அவர் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்; இருதய நோய்க்கான பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்றும், அதே போல் புதிய ஆரம்ப சுகாதார நிலையமும் கட்டித்த தரப்படும் என்றும் அவர் கூறினார் .

இந்நிகழ்ச்சியில்வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும்,

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.