சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்!

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்!

ஜி.சாந்தகுமார்,

  யூ- டியூபரான  சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவர் கைதாகியிருக்கும் நிலையில், அவரை சந்திக்க பலர் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.

   இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

   இதற்காக சங்கர் சிறை கண்காணிப்பாளரிடம்  மனு கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.