ஆற்காடு இன்ஸ்பெக்டர் அண்டு டீமிடம் சிக்கிய வாகன அபேஸ் ஆசாமி!

ஆற்காடு இன்ஸ்பெக்டர் அண்டு டீமிடம் சிக்கிய வாகன அபேஸ் ஆசாமி!

 கு.அசோக்,

 ஆற்காடு அருகே மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ஐந்து இருசக்கர வாகனங்களை அபகரித்த இளைஞரை ஆற்காடு நகர போலிசார் கைது செய்து வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்.

   இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்யார் செல்லும் சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

 தப்பிக்க முயன்ற இளைஞரை போலிசார் சாமர்த்தியமாக  மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததின் காரணமாக அவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

  அந்த இளைஞர் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அருள் (31) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஐந்து முறை தொடர் இருசக்கர வாகனங்கள் அபகரித்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது..

 மேலும்  சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த 5 இருசக்கர வாகனங்களை போலீசார்அவரிடமிருந்து பறிமுதல் செய்ததோடு  அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.