பள்ளி கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பதை தடுக்க செயலி!

பள்ளி கல்லூரிகள் அருகில் போதை பொருள் விற்பதை தடுக்க செயலி!

K.ASOHK,

  பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் நடமாட்டம் விற்பனையோ இருந்தால் அதனை தடுக்கும் வகையில் மாணவர்கள் செயலி மூலம் புகார் அளிக்கலாம் -  மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபாடி போட்டிகளை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.

 இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ,விளையாட்டு குழு உறுப்பினர் சீனிவாசன் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்

   இவ்விழாவில் மாணவர்களிடையே மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் போதையை தடுக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது மாணவர்களின் விழிப்புணர்வும் தேவை காரணம் போதையை தடுக்கும் வகையில் அதற்காக போதைக்கு எதிராக புகார் அளிக்கும் வகையில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

  பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனையையோ நடமாட்டோ இருந்தால் உடனடியாக மாணவர்கள் இந்த செயலிலியில் புகார் அளித்து போதை பொருட்களை தடுக்கலாம் நீங்களும் அதற்காக விழிப்புடன் செயல்பட வேண்டுமென பேசினார்

  தமிழக அளவில் எடுத்துக் கொண்டால் காட்பாடி பகுதியில் தான் உயர் ரக போதை வஸ்த்துக்களும், உக்கா பார்களும் இருப்பது பலரும் அறிந்ததே. அவற்றை தடுக்க இந்த செயலியை பயன்படுத்த தயார். ஆனால் நடவடிக்கை எடுக்க உள்ளுர் காவல்துறை தயாரா என்று சாமன்யர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.