சாலையில் ஒற்றை கொம்பன் காட்டு யானை!

சாலையில் ஒற்றை கொம்பன் காட்டு யானை!

ஜி.கே.சேகரன்,

ஆலங்காயம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை கொம்பன் காட்டு யானை, சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சம்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் மந்தாரகுட்டை காப்புக்காடு பகுதிகளில் மீண்டும் ஒற்றை யானை முகாமிட்டு  அங்குள்ள விவசாய நிலங்களில் வாழை, மாமரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் மேலும் இரவு நேரத்தில் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அந்த வகையில் ஜமுனாமத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை  வழிமறித்ததால் பேருந்து ஓட்டுநர் லாவகமாக பேருந்தை ஓட்டிச் சென்றும், நீண்ட நேரமாக பேருந்து எடுக்க முடியாமல் நிறுத்தி வைத்ததால் பயணிகள் அச்சமடைந்து வந்தனர்.

 தொடர்ந்து ஒற்றை யானையானது ஆலங்காயம் காவலூர் காப்பு காடுகளில் சுற்றித்திரிந்து வனத்துறையினர் விரட்டியதால் ஜமுனாமுத்தூர் புதூர் நாடு பகுதிகளுக்கு சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் காவலூர் பகுதிக்கு திரும்பி வந்துள்ளது.

 இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்