செல்போன் தொலைந்துவிட்டதா? கண்டுபிடிக்க வாட்ஸாப் எண்ணை வெளியிட்டார் வேலூர் சரக டிஜஜி!

கு.அசோக்,
செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ காவல்துறை வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கும் எண் வேலூர் டி.ஐஜி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் 9486214166 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணை வெளியிட்டனர்.
இம்மாவட்டத்தில் செல்போன் திருடு போனாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ உடனடியாக 9486214166 என்ற எண்ணிற்கு ஹாய் என்ற ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியவுடன் செல் டிராக்கர் என்ற கூகிள் பார்ம் உடனடியாக புகார் தெரிவிக்கும் எண்ணிற்கு வரும்.
அதில் செல்போன் எண் ஐ.எம்.ஈ எண் தொலைந்த இடம் அல்லது திருடு போன இடம் ஆகியவைகளை பூர்த்தி செய்து அனுப்பினால் சைபர் கிரைம் மூலம் புகார் பதிவு செய்து புகாருக்கான வரிசை எண் தரப்படும்.
மேலும் சைபர் கிரைம் உடனடியாக செல்போனை கண்டுபிடித்து தர நடவடிக்கை மேற்கொள்ளும்.
வேலூர் மாவட்டத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது செல்போன் தொலைந்தாலோ களவு போனாலோ உடனடியாக காவல்நிலையம் செல்லாமல் பொதுமக்கள் புகார்களை இந்த வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுகொண்டார்.