பட்டையை கிளப்பப் போகும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்! வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றம்!

பட்டையை கிளப்பப் போகும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்! வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றம்!

 ம.பா.கெஜராஜ்,

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கி ஏப்ரம் 4-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடரில் காங்கிரஸின் எதிர்ப்பை கடந்து  வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

  அதே போல், இந்த கூட்டத் தொடரின் போது, குடியேற்றம் - வெளிநாட்டினர் சட்ட மசோதா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா ஆகியவற்றை நிறைவேற்றவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

   மேலும் மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  இது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

  மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்ட நிலையில், இதுபற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தும் என்று கூறப்படுகிறது.

  வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்பட்ட விவகாரத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக எழுப்பி வருகிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்புவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

  இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

   தனது அழுத்தம் காரணமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்திய அரசு முன்வந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

  மேலும், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியாகள், கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும். 

   பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.  எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பும்.

  குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீ£மானம் கொண்டு வருவார். மணிப்பூருக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் இந்த்த கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயலும், அதற்காக  எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை  ஆளும் அரசு சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

   ஆக மொத்தம் ஏப்ரல் நான்காம் தேதிவரை நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.