டப்பாசு வாங்கலையோ டப்பாசு:- வீதிகள் கூவி விற்ற போலிசார்!

டப்பாசு வாங்கலையோ டப்பாசு:- வீதிகள் கூவி விற்ற போலிசார்!

த.நெல்சன்,

தீபாவளி பண்டிகைக்கான பாதுகாப்பு பணிக்கு மத்தியிலும் போலிசார் டப்பாசு விற்பனையில் தனி கவனம் செலுத்தினார்கள்.

  மாநிலம் முழுவதும் பட்டாலியனில் கடைபோட்டு பட்டாசு விற்ற அவர்கள் ஒருகட்டத்தில் போலிஸ் வாகனத்தில் கூவி கூவி விற்கத் துவங்கிவிட்டனர்.

   அதில் வேலூர் மாவட்டத்தில் போலிஸ் ஆம்புலன்ஸ் என்று எழுதப்பட்ட வாகனத்தில் பட்டாசு குவியலை அள்ளிப்போட்டுக் கொண்டு, காட்பாடி வட்டம், சேர்காடு கூட்டு ரோடு பகுதியில் கடைபோட்டனர்.

 வாகனத்தில் இருந்தபடியே விற்ற அவர்களிடம் நியாயமான விலை, சூப்பர் தரம் என்பதால் வியாபாரம் சக்கை போடு போட்டது.

  இடையே திடீரென்று துப்பறியும் ஜீவன் வந்து ஏம்பா டப்பாசு கடைகாருங்களா இங்கு இதை விற்க அனுமதி யார் கொடுத்தது? வெடிவிபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வதாம் என்று கேட்டதும், போலிஸ் பார்ட்டிகள் வேனோடு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

   விசாரித்தபோது அவர்கள் வேலூர் ஆயுதப்படை கேண்டீனில் பணியாற்றும் காவலர்கள் என்று சொன்னார்கள்.

 அப்ப சரி அவுங்களுக்கு எதுக்கு அனுமதி?