மாணாக்களுக்கு உதவிசெய்த அல்ஃபாத தொண்டு நிறுவனம்!

ரா.மதன்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பேர்ணாம்பட்டில் பீம்ராவ் தொழிலாளர் யூனியன் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பி.எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அல்ஃபாத தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அல்ஃபாத தப்ரேஸ் அவர்கள் தொழிலாளர்கள் குடும்பங்களிலுள்ள பள்ளி படிக்கின்ற 50-மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் அல்ஃபாத தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அமீத், சந்தோஷ் குமார், மசிகம் பொன்.குணசீலன், யாகதேவ் ஆகியோர்கள் கலந்து கொண்டு அல்ஃபாத தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.