பாக்கெட் சாரய உறை போல் மாலை அணிந்து அதிமுகவினர் ஆர்பாட்டம்!

பாக்கெட் சாரய உறை போல் மாலை அணிந்து அதிமுகவினர் ஆர்பாட்டம்!

 ஜி.கே.சேகரன்,

  கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக இறந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அதிமுகவினர்  ஆர்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்பாட்டங்களுக்கு பல மாவட்டங்களில் போலிஸ் தடை போட்டனர். இருந்த போதும் வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் திட்டமிட்டபடி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.

 வேலூர் மாவட்டம்,

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர்கள்,வேலழகன்,அப்பு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தை குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் தமிழக அரசையும் காவல்துறையை கண்டித்தும் தமிழக முதல்வர் பதவி விலக கோரியும் கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

 இதில் மூர்த்தி,சிவாஜி,உள்ளிட்ட திரளானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம்,

திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட மதுபான விலை உயர்வே காரணம் என முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேச்சு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் அதிமுக கே.ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத் மற்றும்  ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மணிகண்டன் டாக்டர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மேலும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கழக செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

 அப்போது பேசிய அவர் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என குடும்பத்துடன் வாக்குறுதி அளித்த நிலையில் அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

 கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மார்க் கடையில் 60 ரூபாய்க்கு விற்ற மதுபான பாட்டில்கள் தற்போது திமுக ஆட்சியில் 150 ரூபாயாக விற்பனை செய்யப்படுறது. இந்த விலைவாசி உயர்வு காரணமாக விலை மலிவாக கிடைக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாகவும்,இந்த கள்ளச்சாராயம் மரணத்திற்கு திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட மதுபான விலை உயர்வே காரணம் எனவும்,மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சியின் பாச்சா பொது மக்களிடம் பலிக்காது என பேசினார்.

ராணிப்பேட்டைமாவட்டம்

 தமிழக திமுக அரசு கண்டித்து அதிமுகவினர்கள் சாராய பாக்கெட்டுகளை உடம்பில் மாட்டிக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 முத்துக்கடை பேருந்து நிலையத்தில், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட கழக சார்பாக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைக் கொறடாயுமான  சு.ரவி ஆகியோர் தலைமையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

 தமிழகத்தில் கள்ளசாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும், அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் உடனே பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு சட்டையில் அணிந்து கொண்டும் சாராய பாக்கெட்டுகளை உடம்பில் மாட்டிக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.