அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!! டிராமா என்று சொல்லும் பொதுமக்கள்!!!

அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது!முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!! டிராமா என்று சொல்லும் பொதுமக்கள்!!!

ம.பா.கெஜராஜ்,

 இனிஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மேலும் தேர்தல் வரும் போது தான் கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும் என்றும் இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் இங்கு சொல்கிறேன் என்றும் கூறினார்.


 கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்குச் சென்று இருந்தார் திடீரென்று தனிமையாக சென்று அமித்சாவை சந்தித்த அவர் தமிழகம் திரும்பி வந்த பின்னர் சந்திப்பை குறித்து எதையும் மூச்சு விடவில்லை.ஆனால் ஏதோ ரகசியம் இருக்கிறது என்பது மட்டும் பேசப்பட்டது.


இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு தகுதி மீறிய பதவி. அரசியல் கட்சி தலைவருக்கான தகுதி அவருக்கு இல்லை.

பா.ஜனதா தலைவருக்கான தகுதியில்லாமல் சிறுமை புத்திக்கொண்ட, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு, சிங்கக் கூட்டமாகிய அதிமுக வை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது. ஊளையிடும் சிறுநரி தனியாக நிற்கட்டும். நோட்டாவைவிட கீழ்தான் வாக்கு வாங்குவார். அதை தாண்டி வாக்கு வாங்கமாட்டார்.

அப்படி உள்ளது அவருடைய செல்வாக்கு. அப்படி இருக்கும்போது அம்மாவைப் பற்றியும் அண்ணாவை பற்றியும் பெரியார் பற்றி பேசுகிறார். அப்படி பேச அவருக்கு  என்ன தகுதி இருக்கிறது. கழக பொதுச்செயலாளரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.  

கூட்டணி கட்சியை விமர்சனம் செய்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால், அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பலமுறை எச்சரித்தோம். இனிமேல் கடுமையாக விமர்சனம் செய்வார்கள்.

 இனி அவர்கள் எங்களைப் பற்றிஒரு கருத்து தெரிவித்தால், ஓராயிரம் பதிலடி கொடுக்கப்படும். கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசி வருகிறார்கள். இதை நிறுத்துங்கள் என மேலிடத்தில் அறிவித்துவிட்டோம். ஆனால் அண்ணாமலை நிறுத்தாமல் அவதூறாக பேசிக்கொண்டே இருக்கிறார் மேலிடம் சொல்லாமல் அவர் இப்படி.

பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள்.  ஆனால் அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.பாருங்க பாஜக கூட்டணியில் விலகி விட்டோம் என்றதும்  தொண்டர்கள் எப்படி கைதட்டுகிறார்கள்.

அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலைக்கு காலே கிடையாது. பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது. அப்படிபட்ட நிலைமை. உங்களது.

அவர்களின் வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம். தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவித்தேன் இதற்கு முன்னும் அப்படித்தான் தெரிவிப்பேன். என்று ஜெயக்குமார் சொன்னார்.


இது குறித்து பலர் கருத்து தெரிவிக்கையில், பாஜகவுடன் அதிமுக கூட்டு வைத்தால் எதிர்வரும் தேர்தலில் தோல்வி என்பது நிச்சயம். ஆகவே அதிமுக தனது வாக்கு வங்கியையும் நடுத்தர வாக்கு வங்கிகளையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படி ஒரு டிராமா போடுகிறார்கள் அதிமுக வெற்றி பெற்றதும் மீண்டும் பாஜகவுடன் தான் பயணிக்கும் என்கிறார்கள்.
.