ஏ.சி.சண்முகத்தை முதுகில் குத்தியது பாஜக தான்! முன்னாள் அமைச்சர் வீரமணி காட்டம்!
கு.அசோக்,
பாஜக தான் ஏ.சி.சண்முகத்தை முதுகில் குத்தியது. அண்ணா திமுக, ஏசி சண்முகம் முதுகில் குத்தியதாக கூறுவது தவறு. அவர் தான் எம்,ஜி.ஆரின் முதுகில் குத்திவிட்டு வந்தவர். இந்த முறை அவருக்கு கண்டிப்பாக முதுகில் தான் குத்தபோகிறோம் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேலூரில் பேச்சு.
வேலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.பசுபதியை அறிமுக படுத்தும் கூட்டம் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வேலழகன் நிர்வாகிகள் மூர்த்தி,ராமு. நகர பொறுப்பாளர் ஜெய்சங்கர், குப்புசாமி,முன்னாள் அமைச்சர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் வீரமணி பேசுகையில், திமுக காங்கிரஸ் சேர்ந்த இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர போவது கிடையாது. அதனால் பல வாக்குறுதிகளை கூறி வருகின்றனர். காரணம் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றால் அதையே காரணமா கூறி எதையும் செய்யமாட்டார்கள்.
மேலும் கடந்த தேர்தலில் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்காக நாங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தோம், வாக்குகளை சேகரித்தோம். அந்த நேரத்தில் தேர்தல் அன்றே மத்திய அரசு காஷ்மீர் 370 சட்டத்தை கொண்டு வந்ததால் வாக்குகள் அவருக்கு எதிராக பதிவானது.
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். ஆனால் அதிமுகவினர் உழைப்பினால் ஏ.சி.சண்முகம் 8ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மேலும் அவரை அதிமுக முதுகில் குத்திவிட்டதாக கூறுகிறார். நாங்கள் முதுகில் குத்தவில்லை பாஜக தான் அவரின் முதுகில் குத்தியது. ஆனால் அவர் அந்த பாஜக சின்னமாக தாமரையில் நிற்கிறார். ஏ.சி.சண்முகம் தான் எம்.ஜி.ஆரின் முதுகில் குத்திவிட்டு வந்தவர்.
இந்த தேர்தலில் தான் உண்மையாகவே ஏ.சி.சண்முகம் முதுகில் அதிமுக குத்தப்போகிறது என பேசினார்.