சிறுமியை கெடுத்தவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

சிறுமியை கெடுத்தவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

 திண்டுக்கல் மாவட்டம்,  சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஞ்சுகுழிபட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34) என்பவரை  போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

   இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி.சாந்தி அற்புத மேரி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் 28.05.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி கார்த்திக் என்பவருக்கு  24 ஆண்டுகள் சிறை தண்டனை  மற்றும்  ரூ.15000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.