பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட முகாம்கள்:- ஆட்சியர் அழைப்பு!!

பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட முகாம்கள்:- ஆட்சியர் அழைப்பு!!

 ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்     முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனினும், விண்ணப்பித்து வைப்புத்தொகை இரசீது பெறாத பயனளிகளுக்கும் உள்ள குறைகளை தீர்க்க முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.கா.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் 20.10.2021 புதன்கிழமை மற்றும் 21.10.2021 வியாழன் கிழமைகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடைபெறும்.

 18 வயது பூர்த்தி அடைந்த முதிர்வு தொகை வேண்டி விண்ணப்பித்தும் தற்போது வரை தொகை வங்கி கணக்கில் பெறப்படாத பயனாளிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

  வைப்புத்தொகை பத்திரம், முதிர்வு தொகைக்காக விண்ணப்பித்த போது கொடுத்த வங்கி கணக்கு புத்தகம் (நகல்) , மாற்றுச் சான்றிதழ் (நகல்), 10 வது மதிப்பெண் சான்றிதழ் (நகல்) ஆகியவற்றுடன் வர வேண்டும்.

 வைப்புத்தொகை இரசீது பெறாத பயனாளிகள் இ-சேவை மையத்தில் பதிவு செய்த ஒப்புகை சீட்டுடன் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,வேலூர்