நீங்க சொன்னா நான் நிறுத்தனுமா?சர்வதேச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த ரஷியா!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
சர்வதேச நீதிமன்ற உத்தரவை ரஷியா ஏற்க மறுத்து விட்டது. தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்தும்படியும், ரஷியாவுக்கு உத்தரவிடக் கோரியும், ரஷிய படைகளை வெளியேற்றக் கோரியும் ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுகள் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக, அதாவது போருக்கு எதிராக வாக்களித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச நிதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள ரஷியா. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என ரஷியா கூறி உள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை ரஷியா கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறும் திமித்ரி பெஸ்கோவ், இந்த வழக்கில் இரு தரப்பில் இருந்தும் ஒப்புதல் பெற முடியாது. ஆகவே தீர்ப்பு செல்லாது என்று கூறியுள்ளார் அவர்.