நயன்தாராவும் சென்னை மேயரும் சந்திப்பு!

நயன்தாராவும் சென்னை மேயரும் சந்திப்பு!

  ஆர்.ராஜேஷ்குமார்,

   நடிகை நயன்தாரா தனது லிவ்விங் பார்ட்டனர் விக்னேஷ் சிவனோடு இணைந்து கோயில்களுக்கு செல்வது வாடிக்கை.

  இந்நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

  அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனும் கோவிலுக்கு வந்தார். அப்போது நயன்தாரா, சென்னை மேயர் பிரியாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்

   பதிலுக்கு பிரியாவும் நன்றி தெரிவித்த பின்னர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இவற்றை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.