சலைக்காமல் மனு பெற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா!

சலைக்காமல் மனு பெற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா!
கு.அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் அரங்கில் வழக்கம் போல் இன்று மன்டே பெட்டிஷன் பெறப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வாணியம்பாடி ஆம்பூர் நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரடியாக சந்தித்து கொடுத்தனர்.
பொதுமக்களின் குறைகளை நன்குணர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாஹா கொஞ்சமும் சலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பொதுமக்களிடம் மனுப்பெற்று குறைகளைக் கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.
மனு வாங்கும் அதே வேகத்தில் தீர்வும் கிடைத்தால் சரிங்க.