உனக்கு 17 எனக்கு 62..உதரபிரதேச உடன்பாடு! சூப்பர் மூவ் என இண்டியா கூட்டணி கட்சிகள் ஹேப்பி! பாஜக?

உனக்கு 17 எனக்கு 62..உதரபிரதேச உடன்பாடு! சூப்பர் மூவ் என இண்டியா கூட்டணி கட்சிகள் ஹேப்பி! பாஜக?

உ.சசிகுமார்,

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி 63 காங்கிரஸ் 17 என்ற தொகுதி உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

 உத்தரப் பிரதேசத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில் இண்டியா கூட்டணி கச்சிதமாக ஒரு விஷயத்தை செய்து முடித்துள்ளது. பாஜக அசுர பலத்துடன் இருக்கும் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கைகோர்த்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை சரியான நேரத்தில் உணர்த்தி இருக்கின்றனர்.

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் இண்டியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாட்டிலேயே அதிகப்படியான தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் நாடு முழுவதும் எதிரொலிக்கும். கடந்த 2019 தேர்தலில் மகாகத் பந்தன் - காங்கிரஸ் இடையில் பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கடைசி வரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக தனித்தனியே போட்டியிட்டதால் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்தது.

  62 தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவீதம் 49.98 ஆகும். தேசிய ஜனநாயக கூட்டணியாக பார்த்தால் 51 சதவீத வாக்குகளையும் 64 தொகுதிகளையும் கைப்பற்றினர். மகாகத் பந்தன் கூட்டணி (பகுஜன் சமாஜ்இ சமாஜ்வாதிஇ ராஷ்டிரிய லோக் தள்) 39.23 சதவீத வாக்குகளையும் 15 தொகுதிகளையும் கைப்பற்றியது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் உத்தரப் பிரதேசம் (80), பிகார் (40) என மொத்தம் உள்ள 120 சீட்டுகள் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் உள்ளன.

 நாட்டின் மொத்த தொகுதிகளான 543 ல் 272 இடங்களை கைப்பற்றினால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். இந்த 272 இடங்களில் சுமார் 44 சதவீத இடங்கள் மேற் சொன்ன இரண்டு மாநிலங்களிலும் வந்துவிடுகின்றன. கடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 103. கிட்டதட்ட 85 சதவீத இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி தட்டி தூக்கியது. இது தனிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜகவிற்கு பெரிதும் உதவியது. இம்முறை அப்படி விட்டு விடக் கூடாது என்று திட்டமிட்ட இண்டியா கூட்டணி சூப்பரான மூவை முன் வைத்திருக்கிறார்கள்.

 120 தொகுதிகள் என்ற கணக்கில் வெறும் 30 தொகுதிகளுக்குள் சுருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் 200 அல்லது 220 என்ற வெற்றி கணக்கில் வந்து நிற்பார்கள். இது இந்தியா கூட்டணி வெற்றிக்கு அருமையான ஃபார்முலா என்று கூட சொல்லலாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தையும் உடன்படிக்கையும் முதல் கட்டத்திலேயே சுமூகமான நிலையை எட்ட வேண்டும். அப்போது தான் கீழ்மட்ட தொண்டர்கள் கைகோர்த்து உற்சாகமாக வேலை செய்ய முடியும். கடைசி வரை இழுபறி கூட்டணியை முறித்து கொள்வது போன்றவை தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தும்.

   தேர்தல் வேலைகளில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வெற்றியை வேறு ஒருவர் கைகளில் விட்டு கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிடும். எனவே உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி 63 காங்கிரஸ் 17 என்ற தொகுதி உடன்பாடு பெரிதும் வரவேற்கக் கூடிய விஷயம்.

 காங்கிரஸுக்கு 17 சீட் கான உத்தேசப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ரேபரேலி, கான்பூர், அமேதி, ஃபதேபூர் சிக்ரி, பான்ஸ்கான், சஹரான்பூர், பிரயாக்ராஜ், மகாராஜ்கஞ்ச், பனாரஸ், அம்ரோஹா, ஜான்சி, புலந்த்சாஹர், காசியாபாத், மதுரா, ஹத்ராஸ், பாராபங்கி, டியோரியா ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க சமாஜ்வாதி முன்வந்துள்ளது. இதில் ஹத்ரால் தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருப்பத்தை பாஜக எதிர்பார்க்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.