ரோசா ரோபோ...தமிழகத்தின் முதல் மருத்துவ ஹீரோ! நறுவீ மருத்துவமனையில் துவக்கம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

ரோசா ரோபோ...தமிழகத்தின் முதல் மருத்துவ ஹீரோ! நறுவீ மருத்துவமனையில் துவக்கம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ்,

தமிழகத்தின் முதல் மருத்துவ ஹீரோவான "ரோசா ரோபோவை" வேலூர் நறுவீ மருத்துவமனை நிறுவியுள்ளது.  இவற்றை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

  ரோபோவை கொண்டு மூளை அறுவை சிகிச்சை மற்றும் வலிப்பு தீர்க்கும் சிகிச்சை அளிக்கும் வசதி வேலூர் நறுவீ மருத்துவமனையில் துவக்கிவைக்கப்பட்டது.

 தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மூளை அறுவை சிகிச்சை ரோபோவையும், வலிப்பு நோய் கண்டறிதல் பிரிவை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் . காந்தி அவர்களும் இன்று தொடங்கி வைத்தனர்.

  அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டத்தின் தொழில்நுட்ப கூட்டுடன், வேலூரில்  நறுவீ மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

  500 படுக்கை வசதியுடன்,  சர்வதேச தரத்தில்  இருதய நோய் பிரிவு , அவசர சிகிச்சை பிரிவு , நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு , சிறுநீரக பிரிவு , மகப்போறு மருத்துவம் , பல் மருத்துவம் , காது , மூக்கு , தொண்டை சிகிச்சை பிரிவு , தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவு , குழந்தைகள் பிரிவு , மூட்டு வலி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

 அப்படியிருக்க, தற்போது, ரோபோ மூளை அறுவை சிகிச்சை பிரிவும், வலிப்பு நோய் கண்டறியும் பிரிவும் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.

   இதன் தொடக்க விழா இன்று காலை நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது . விழாவிற்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வரவேற்று பேசியதாவது: நறுவீ மருத்துவமனை தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல்வேறு விதமான நோயாளிகளுக்கு சிறந்த முறையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் இம்மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதின் மூலம் கோவிட் பெருந்தொற்றிலிருந்து காப்பற்றப்பட்டுள்ளனர்.

  மருத்துவர்கள் மூலமே மூளை அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இம்மருத்துவமனையில் ' ரோசா ' என்ற ரோபோ மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி நாட்டில் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை , கேரள மாநிலத்தில் உள்ள அமிர்தாமருத்துவமனையில் மட்டுமே இருந்து வந்தது.

   தற்போது, மூன்றாவதாக நறுவீ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக , தமிழ்நாட்டில் ரோபோ மூலம் முளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி நறுவீ மருத்துவமனையில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.   

   வழக்கமாக , மூளை அறுவை சிகிச்சை செய்ய குறைந்தது 12 மணி நேரமாகும் , ஆனால் அந்த பணியை ரோபோ 6 மணி நேரத்திலேயே துல்லியமாக செய்துவிட முடியும் என்பதும் , இந்த அறுவை சிகிச்சையில் இரத்த விரயம் இருக்காது , தலையில் அறுவை செய்யாமல் , பயாப்ஸி நீடில் மூலமாக பாதிப்பு உள்ள பகுதியில் மட்டும் சிகிச்சை அளித்து குணமாக்க முடியும்.

   மேலும் , தீராத நோய் என்று கருதப்பட்டு வரும் வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளித்து முற்றிலும் குணமாக்க இம்மருத்துவமனையில் வலிப்பு நோய் கண்டறிதல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

  வலிப்பு நோய் , உடலில் எந்த பகுதியில் பாதிப்பு உண்டாக்கியுள்ளது என்பதை MRI ஸ்கேன் மற்றும் HD EEG தொழில்நுட்ப வசதி மூலமாக கண்டறிந்து வலிப்பு நோயை குணமாக்க முடியும்.

  இந்த வசதி நாட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது , தற்போது நறுவீ மருத்துவமனையில் அந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இது வலிப்பு நோயாளிகளுக்கு பெரும் உதவியாக அமையும் என்று பேசினார்.

   விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் மருத்துவமனை, அறுவை சிகிச்சை என்பது மருத்துவர்களால் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் கால விரயம் ஏற்படுவதை தவிர்க்கவும் , நவீன தொழில்நுட்பத்தை கொண்டு ரோபோ மூலம் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யும் வகையில் இம்மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை வசதி தொடங்கியுள்ளது வரவேற்புக்குறியது.

  மாறி வரும் நவீன உலகத்தில் மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியமாகிறது . பல்வேறு நவீன மருத்துவ வசதிகளை கொண்ட நறுவீ மருத்துவமனை நாடு போற்றும் மருத்துவமனையாக உயர வேண்டும் என்று குறிப்பிட்டார் .

   அமைச்சர் ஆ£ . காந்தி பேசுகையில், நறுவீ மருத்துவமனையில் வலிப்பு நோய் கண்டறியும் பிரிவு,  சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது அதனை நல்ல முறையில் பயன்படுத்தி வலிப்பு நோயிலிருந்து மீள வேண்டும் என்றா£.

   நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள்  நந்தகுமார் ,கார்த்திகேயன் , ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர் .

  இதில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத் , செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி , பொது மேலாளர் நிதின் சம்பத் , நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சிற்றம்பலம் , நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் பூபேஷ் புகழேந்தி , கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் . முடிவில் நறுவீ மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் நன்றி கூறினார்.