செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து மகளிர்க்கு ரூ-1000/-! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என அறிவிப்பு!

செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து மகளிர்க்கு ரூ-1000/-! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.

 அப்போது அவர் பேசியதாவது; மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என அழைக்கப்படும். இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் ஆட்சித்தலைவர்களான உங்களின் பங்கு முக்கியமானது.  இந்த திட்டம் அண்ணாவின் பிறந்ததினமான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் 2 மாதகாலமே உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  சாலையோரம் வசிப்போர், தூய்மை பணியாளர்கள் ஆகியோரிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இருக்கிறதா என்று அதிகாரிகள் கேட்காமல் அவர்களுக்கு இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியுமோ அந்த வகையில் உதவ வேண்டும்.

  இந்த திட்டம் தொடர்பாக ஆட்சியருக்கோ, அதிகாரிகளுக்கு  சந்தேகம் மற்றும் உதவிகள் வேண்டுமென்றால் அமைச்சர் உயதயநீதியை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம். என்னையும் தொடர்பு கொள்ளலாம் என்று பேசினார்.

  இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க முடிவு. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.

   பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது.

  எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்தக் கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்சபட்ச வயது ஏதுமில்லை. தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  அந்தந்த ரேஷன் கடைகளில் இதற்கான முகாம்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.