கறுப்பு ஆடுகள் யார்! திடீரென வேலூர் வந்த புஃட் செல் ஐ.ஜி! அரிசி கடத்தல் காரர்களுக்கு எதிராக டோல்பிரி எண்!
உ.சசிகுமார்,
தமிழ்நாடு ரேஷன் அரிசியை அண்டை மாநிலமான கர்நாடகத்துக்கு கடத்தி, அங்கு பாலிஷ் செய்யப்பட்டு ஆப்பிரிக்க நாடு வரை அனுப்பிவைக்கப்படுவதாக கடந்த 14.11.2023 ஆம் தேதி livelook.in இணைய தளத்தில் பரபரப்பான செய்தி வெளியானது. (அதன் லிங் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கிறது) இந்நிலையில் அன்றைய தினம் மாலை உணவு பொருள் கடத்தல் பிரிவு (புஃட் செல்) ஐ.ஜி.நிர்மல் குமார் ஜோஷி அவர்கள் திடீர் என்று வேலூருக்கு வந்து போலிஸ் கெஸ்ட் ஹவுசில் தங்கினார்.
அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மறுதினமான நேற்று நவ-15 ஆம் தேதி காலை காட்பாடி, வள்ளிமலை ரோடு, காமராஜ் நகரில் அமைந்துள்ள புஃட் செல் அலுவலகம் சென்றார். அப்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர்.
"ஆள் காட்டியால் தப்பிவந்த பிரபல அரிசி கடத்தல் மன்னன் அதிகாரிகளால் கைது!
"அங்கு புஃட் செல் டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக இந்த அலுவலகம் காந்தி நகர் மேற்கு பகுதியில் இருந்து காட்பாடி காமராஜ் நகருக்கு மாற்றப்பட்ட விஷயம் பொதுமக்களுக்கு தெரிவில்லையே? என்பது உட்பட, அண்டை மாநிலத்துக்கு தொடர்ச்சியாக அரிசி கடத்தி வந்த கணேசனுக்கு உதவி செய்யும் கறுப்பு ஆடு யார் என்பது குறித்தும் விசாரித்ததாக தெரிகிறது".
அதன் பின்னர், சேர்காடு, கிறிஸ்ட்டியான் பேட்டை பகுதிகளில் உள்ள செக்போஸ்டுகளை ஆய்வு செய்துவிட்டு, குடியாத்தம் சென்ற ஐ.ஜி. அங்கு ஆந்திர எல்லை சைனகுண்டா செக்போஸ்ட்டில் தீவிரமாக ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு அரிசி கடத்தல் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் டோல் ஃபிரி நெம்பர் பொறித்த பேனர்கள் ஒட்டப்பட்டது. அப்போது அங்கு எத்தனை பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது உட்பட விசாரணை செய்த ஐ.ஜி, அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொண்டார்.
அப்போது கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டைக்கு தமிழ்நாடு ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்தும், அரிசிகடத்தல் கும்பலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனபதை உள்ளிட்ட பல விவரங்களை அறிய நமது நிருபர் முயன்ற போது, நான் பேட்டியெல்லாம் கொடுக்கக்கூடாது என்று மறுத்துவிட்டார்.
குறிப்பு:- தமிழகத்தை அடுத்துள்ள மாநிலங்களான கர்நாடகத்துக்கோ அல்லது ஆந்திராவுக்கோ அரிசி கடத்தும் கும்பல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகத்தான் சென்றாக வேண்டும். இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் அதற்கான பலனை அவர்கள் என்ஜாய் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் வேலூரில் திடீர் ஆய்வு நடத்திய ஐஜி அவர்களுக்கு உடனிருந்து வழிகாட்டிய அதிகாரிகள் தப்பி தவறிக்கூட அவரை கடத்தல்காரர்களின் கிடங்குகள் பக்கமே அழைத்து போகவில்லை, குறிப்பாக கைது செய்யப்பட்டிருக்கும் கணேசனின் பள்ளிகொண்டா கிடங்கு பக்கமே அழைத்துச் செல்லவே இல்லையாம்.
அதனால் என்ன?!