நெல் கொள்முதல் நிலையங்கள் எங்கே? சொன்னது என்னச்சு!

கு.அசோக்,
மத்திய அரசின், தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு கட்டுபாட்டில் 21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அறிவித்தும் பெரும்பாலான இடங்களில் செயல்படவில்லை - விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், தாமாரைப்பாக்கம், வெள்ளம்பி, வளையாத்தூர், உள்ளிட்ட 21 இடங்களில் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பின் கட்டுபாட்டில் நேரடி நெல் கொள்முதல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதனை நம்பி இராணிப்பேட்டை, திமிரி, கலவை, ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 21 இடங்களில் திறக்கபட வேண்டிய நெல் கொள்முதல் நிலையங்கள் ஒன்று கூட திறக்கபடவும் இல்லை செயல்படவும் இல்லை.
இதனால் நெல் கொள்முதல் நிலையங்களை நம்பி பயிர் வைத்த நெல் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் நெல் கொள்முதல் செய்ய முடியாத காரணத்தினால் வியாபாரிகளும் இடைத்தரகர்களும் அடிமாட்டு விலைக்கு நெல்லை கேட்கும் அவல நிலை ஏற்பட்டது.
ஆகவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக இராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் வேதனையை போக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.