டுபாக்கூர் சான்று மூலம் வேலைக்கு சேர்ந்த வடமாநில இளைஞர்கள்:- தமிழகத்தில் தில்லுமுல்லு!!

டுபாக்கூர் சான்று மூலம் வேலைக்கு சேர்ந்த வடமாநில இளைஞர்கள்:- தமிழகத்தில் தில்லுமுல்லு!!

  ஆர்.ராஜேஷ்குமார்,

 தமிழகத்திலுல்ள மத்திய அரசு அலுவலங்களில் பணிக்கு சேர போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த 200-க்கும் அதிகமான வட மாநிலத்தவர் சேர்ந்து பயனட்ய்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் உள் மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களான இரயில்வே, என்எல்சி போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் பிறமாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

 அந்த வகையில் டெல்லி, உ.பி, அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தவர்கள் அதிகளவில் மத்திய அரசு வேலைவாய்ப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

 குறிப்பாக தபால் துறை 2016ம் ஆண்டு நடத்திய தேர்வில் வடஇந்தியர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில்  வடமாநிலத்தவர் மோசடி செய்து  சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில்  தற்போது தமிழக மத்திய அரசு நிறுவனங்களில் 20-க்கும் மேற்பட வடமாநிலத்தவர் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 தமிழக தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து மத்திய அரசு பணிகளில்  பல்வேறு துறைகளில் வட மாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர்.

   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 200 பேர் போலி சான்றிதழ்  மூலம் பணியில் சேர்ந்து உள்ளனர். அஞ்சலக துறை,சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இந்த மோசடி நடந்து உள்ளது.

   யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை  உறுதி செய்து உள்ளது. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்து உள்ளது.

போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்து உள்ளது.

 அப்படியிருக்க இவ்வாறு மோசடி செய்ததன் மூலம் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் கோருகிறார்கள்.